வெள்ளி, 21 மார்ச், 2014

குறுந்தொகை (எட்டுதொகை நூல்)

குறுந்தொகைப் பாடல்களின்
சிற்றெல்லை நான்கு அடி,
பேரெல்லை எட்டு அடி. அகவற்பாவின்
அமைப்பில் சுருங்கிய அடிவரையறையைக்
கொண்ட பாடல்
தொகுதி என்பதால்
குறுந்தொகை என்று பெயர்
பெற்றது.

குறுந்தொகை நூலின்
செய்யுள் தொகை கடவுள்
வாழ்த்தை விடுத்து 401. இதனுள் 307, 391 ஆம்
செய்யுட்கள் ஒன்பது அடி உடையன.
எட்டு அடிப் பேரெல்லையைக் கடந்துள்ள இந்த
இரண்டு பாடல்களும் ஐயத்திற்கு இடமானவை.

'இத்தொகை முடித்தான் பூரிக்கோ, இத்
தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்'
என்பது பழங் குறிப்பு. இதனைத்
தொகுப்பித்தார் பெயர்
தெரியவில்லை. 10 பாடல்களின் ஆசிரியர்
பெயர் காணப்பெறவில்லை. எஞ்சிய
பாடல்களைப் பாடியவர்களின்
தொகை 205.

கடவுள்வாழ்த்து

தாமரை புரையும் காமர் சேவடிப்
பவழத்து அன்ன மேனி, திகழ் ஒளி,
குன்றி ஏய்க்கும் உடுக்கை, குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர்
நெடு வேல்,
சேவல்அம் கொடியோன் காப்ப,
ஏம வைகல் எய்தின்றால்-உலகே.
பாரதம் பாடிய பெருந்தேவனார்

1. குறிஞ்சி

செங்களம் படக்
கொன்று அவுணர்த் தேய்த்த
செங் கோல் அம்பின், செங்
கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.
தோழி, காந்தள் கையுறையை மறுத்தது
திப்புத்தோளார்

2. குறிஞ்சி

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத்
தும்பி!
காமம் செப்பாது,
கண்டது மொழிமோ;
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி,
தலைமகளை இயற்கைப் புணர்ச்சிகண்
இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின்
நீக்குதற்பொருட்டு, மெய்
தொட்டுப் பயிறல் முதலாயின அவள்
மாட்டு நிகழ்த்திக் கூடி, தனது அன்பு தோற்ற
நலம் பாராட்டியது
இறையனார்

3. குறிஞ்சி

நிலத்தினும் பெரிதே; வானினும்
உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே- சாரல்
கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,
பெருந்தேன் இழைக்கும்
நாடனொடு நட்பே.
தோழி தலைவனை இயற்பழிக்கத் தலைவி எதிராக
இயற்பட மொழிந்தது
தேவகுலத்தார்

4. நெய்தல்

நோம், என் நெஞ்சே நோம், என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே.
தலைவி பற்றிக் கவன்ற தோழிக்குத் தான்
ஆற்றியமை புலப்படக் கூறியது
காமஞ்சேர் குலத்தார்

5. நெய்தல்

அதுகொல், தோழி! காம நோயே-
வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை,
உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர்,
மெல்லம் புலம்பன் பிரிந்தென,
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே.
பிரிவுத் துயரத்தில் கண் உறங்காமை
நரி வெரூ உத்தலையார்

6. நெய்தல்

நள்ளென்றென்றே, யாமம்;
சொல்அவிந்து,
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.
தாமரையில் அமர்ந்த பிரமன் (பிரமனார்)
வரைவிடை பொருளுக்காகத் தலைவன்
பிரிந்தான். தலைவி நடு இரவில் உலகுள்
அனைவரும் துயிலத் தான் மட்டும்
துயிலாமை பற்றி வருந்தியது
நெய்தல் பதுமனார்

7. பாலை

வில்லோன் காலன கழலே; தொடியோள்
மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார்கொல்? அளியர் தாமே-ஆரியர்
கயிறு ஆடு பறையின், கால் பொரக்
கலங்கி,
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னியோரே.
பாலை கண்டோர் கூற்று
பெரும்பதுமனார்

8. மருதம்

கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம் இல் பெருமொழி கூறி, தம்
இல்,
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல,
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.
கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட
காதற்பரத்தை அவட்குப் பாங்காயினார்
கேட்பச் சொல்லியது
ஆலங்குடி வங்கனார்

9. நெய்தல்

யாய் ஆகியளே மாஅயோளே-
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் செப்பில் தமிய
வைகிய
பெய்யாப் பூவின் மெய் சாயினளே;
பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல்
இன மீன் இருங் கழி ஓதம்
மல்குதொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணம் துறைவன் கொடுமை
நம் முன் நாணிக் கரப்பாடும்மே.
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது
சுயமனார்

10. மருதம்

யாய் ஆகியளே விழவு முதலாட்டி;
பயறு போல் இணர பைந் தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக்
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள் ஆகலின், நாணிய வருமே.
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது.
ஓரம்போகியார்

11. பாலை

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழும்
கண்ணொடு புலம்பி,
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழு, இனி-வாழி, என் நெஞ்சே!-முனாது,
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர்
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே.
தலைமகள் தன் நெஞ்சிற்குச்
சொல்லுவாளாய்த் தோழி கேட்பச்
சொல்லியது
மாமூலனார்

12. பாலை

எறும்பி அளையின் குறும் பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறி,
கொடு வில் எயினர், பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப, அவர் தேர் சென்ற ஆறே;
அது மற்று அவலம் கொள்ளாது,
நொதுமல் கழறும், இவ் அழுங்கல்
ஊரே.
"ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக்
கிழத்தி உரைத்தது
ஓதலாந்தையார்.

13. குறிஞ்சி

மாசு அறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த்
துறுகல்
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே - தோழி!-
பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே.
தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான்
ஆற்றுவித்துப் பிரிய, வேறு பட்ட
கிழத்தி தோழிக்கு உரைத்தது
கபிலர்

14. குறிஞ்சி

அமிழ்து பொதி செந் நா அஞ்ச
வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்றுச்சில்
மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம, யானே!
பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில்,
"நல்லோள் கணவன் இவன்" எனப்
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.
"மடன்மா கூறும் இடனுமார் உண்டே"
என்பதனால் தோழி குறை மறுத்துழி, தலைமகன்,
"மடலேறுவல்" என்பதுபடச் சொல்லியது
தொல்கபிலர்

15. பாலை

பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
தொல் மூதாலத்துப்
பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.
உடன்போயின பின்றை,
தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள்.
நிற்ப, செவிலித் தாய்
நற்றாய்க்கு அறத்தொடு நின்றது
ஒளவையார்
16. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர்
பொன் புனை பகழி செப்பம்
கொண்மார்,
உகிர் நுதி புரட்டும் ஓசை போல,
செங் காற் பல்லி தன் துணை பயிரும்
அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே?
பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள்
ஆற்றாமை கண்டு, தோழி கூறியது
பாலை பாடிய பெருங்கடுக்கோ

17. குறிஞ்சி
மா என மடலும் ஊர்ப; பூ எனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப-காமம்
காழ்க்கொளினே.
தோழியற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன்
தோழி குறைமறாமல் கூறியது
பேரெயின் முறுவலார்

18. குறிஞ்சி
வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே?-சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு,
இவள்
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே!
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத்
தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது
கபிலர்

19. மருதம்
எவ்வி இழந்த வறுமையர் பாணர்
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து
எல்லுறும் மெளவல் நாறும்
பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே?
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண்
தலைமகன் சொல்லியது
பரணர்

20. பாலை
அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து,
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உருவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை நாமே!
செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கோப்பெருஞ்சோழன்

நற்றிணை

நற்றிணை என்னும் இந்நூல்
தனிப்பாடல்களாக பலராலும்
பாடப்பட்டு பின்னர்
தொகுக்கப்பட்டது. இது
எட்டுத்தொகை நூல்களுள்
ஒன்றாகும்.
எட்டுத்தொகை நூல்கள்
இவையெனப் பாடும்
வெண்பாவால் முதலிடம்
பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். நல்
என்ற அடைமொழி பெற்றது.
இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர்.
இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த
400 பாடல்களைக் கொண்டது.
இந்நூலைத் தொகுத்தவர்
யாரெனத் தெரியவில்லை.

தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த
பாண்டியன் மாறன் வழுதி" ஆவான்.
நற்றிணைப் பாடல்கள்
அகப்பொருள் பாடல்களாம்.

பாடியோர்
குறுந்தொகைப் புலவர்கள்
போலவே நற்றிணைப் புலவர்களும் பாடல்
தொடர்களால் பெயர்
பெற்றுள்ளனர். அவர்கள் -
வண்ணப்புறக் கந்தத்தனார், மலையனார்,
தனிமகனார், விழிக்கட் பேதைப்
பெருங்கண்ணனார்,
தும்பிசேர்க்கீரனார், தேய்புரிப்
பழங்கயிற்றினார், மடல் பாடிய
மாதங்கீரனார் என்ற எழுவராவர். மேலும்
59 பாடல்களைப் பாடிய புலவர்களின்
பெயர்கள் காணப்படவில்லை. இதில்
உள்ள நானூறு பாடல்களில் 234ஆம்
பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும்
கிட்டவில்லை.

நற்றிணைக் காட்டும் வாழ்க்கை

நற்றிணைப் பாடல்கள் மூலம் அக்கால
மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க
வழக்கங்களை அறியலாம். தலைவன்
பிரிவால் வாடும் தலைவி அவன்
வரவை சுவரில் கோடிட்டுக் காட்டும் வழக்கமும்,
காதலன் வரவைப் பல்லி கூறுவதாகக்
கருதுவதும் அம்மக்களின் நம்பிக்கையைக்
காட்டுகிறது. மேலும் மகளிர்
காற்பந்து விளையாடும் வழக்கமும்
இருந்ததை அறியமுடிகிறது. பிற்காலத்தில்
சிறந்து விளங்கிய "தூது" என்ற
சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருகு,
கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும்
பாங்கையும் நற்றிணையில் காணலாம்.
மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு,
கொடைத்திறம், மன்னர்களைப்
பின்பற்றி மக்கள் வாழ்ந்த
அறவாழ்வு ஆகியவற்றை அறியவும்
நற்றிணைப் பாடல்கள்
துணை செய்கின்றன.

எடுத்துக்காட்டுப் பாடல் 1

என் கைக் கொண்டு தன் கண்
ஒற்றியும்
தன் கைக் கொண்டு என் நல்
நுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும்
கள்வர் போலக் கொடியன் மாதோ
மணி என இழிதரும் அருவி பொன்
என
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி
கோடு உயர் பிறங்கல் மலைகிழவோனே
நற்றிணை 28 - முதுகூத்தனார்

பாடல் 2

விளையாடு ஆயமொடு வெ
ண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த கான்முளை ஆகைய
நெய்பெய் தீம்பால்
பெய்தினிது வளர்ப்ப
நும்மினும்
சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம!!நாணுதும்
நும்மொடு நகையே! (பா.172)

பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள்
என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின்
தொகுப்புகளுள் ஒன்றாகும்.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
இவை இரண்டும் பதினெண்
மேல்கணக்கு நூல்களாகும்.
இவற்றுள்
திருமுருகாற்றுப்படை ,
பொருநராற்றுப்படை ,
சிறுபாணாற்றுப்படை ,
பெரும்பாணாற்றுப்படை ,
முல்லைப்பாட்டு , மதுரைக் காஞ்சி,
நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு ,
பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய
பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே
பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.

இவை அனைத்தும்
இன்று ஒரே தொகுப்பாகக்
குறிப்பிடப்படுகின்ற போதிலும்,
இவை ஒன்றுக்கொன்று தொ
டர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால்
பல்வேறு கால கட்டங்களில்
இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு எனச்
சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும்
பிற்காலத்தில்
எழுந்ததென்பதே பலரது கருத்து. இந்த
அரிய தொகுப்புக்கு
நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

பத்துப் பாட்டால் அறியலாகும்
செய்திகள்
இத் தொகுதியிலுள்ள நூல்கள் சங்க
இலக்கியங்களுள் சிறப்பிடம் பெறுபவை.
இவற்றில் பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கை
முறை, பண்பாடு பற்றிய பல அரிய
தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன.

வரலாற்றுச் சம்பவங்கள், அரசர்களினதும்
வள்ளல்களினதும் இயல்புகள்,
பொது மக்களின் காதல்
வாழ்க்கை, அக்காலக் கலைகள், நகரங்கள்
பற்றிய தகவல்கள், இயற்கை பற்றிய
வருணனைகள்
போன்றவை தொடர்பான பல
தகவல்களை இவற்றிலிருந்து பெற
முடிகின்றது.

பத்துப் பாட்டு நூல்களில்
இயற்கைக்கு முரண்பட
கற்பனைகளோ பொருந்தா உவமைகளோ க
ாணப்பெறவில்லை. பண்டைத் தமிழ்ர்
வாழ்வை உள்ளது உள்ளபடிக் கட்டும்
காலக் கண்ணாடியாக
இவை விளங்குகின்றன.

வாய்பாட்டுப் பாடல்
முருகு பொருநாறு பாணிரண்டு முல்
லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோல நெடுநல்
வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து
என வரும் பழம்பாடல், பத்துப்
பாடு நூல்கள் எவை என்பதை மிகத்
தெளிவாகக் காட்டும்.

அடிவரையறை
இத் தொகுப்பிலுள்ள பத்து நூல்களும்
நீண்ட அகவற் பாக்களால் ஆனவை.
இவற்றுள் 103 அடிகளைக்
கொண்டமைந்த முல்லைப் பாட்டுக்கும்,
782 அடிகளையுடைய மதுரைக் காஞ்சிக்கும்
இடைப்பட்ட நீளங்களைக்
கொண்டவையாக ஏனைய நூல்கள்
அமைந்துள்ளன.

"நூறடிச் சிறுமை நூற்றுப் பத்தளவே
ஏறிய அடியின் ஈரைம் பாட்டு
தொடுப்பது பத்து பாட்டெனப்
படுமே
அதுவே, அகவலின் வருமென அறைகுவர்
புலவ்ர்".
-(பன்னிருபட்டியல் 266-267)
என்பது இதன் இலக்கணமாகும்.

பதிப்புகள்
சுவடிகளில் எழுதப்பட்டுப்
பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல்கள்
பிற்காலத்தில் அழிந்துபோகும்
நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத்
தற்காலத் தமிழரும் பயன் பெறும்
வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர்
அவர்கள் 1889 ஆம் ஆண்டு முதன்
முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.
இதன் பின்னர் வேறும் பலர் முழுத்
தொகுதியாகவும், இதிலுள்ள
நூல்களிற் சிலவற்றைத் தனித் தனியாகவும்
புதிய உரைகளுடன் வெளியிட்டுள்ளனர்.

எட்டுத்தொகை

எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு.

இது சங்க இலக்கியம் . இதில் அடங்கிய
ஒவ்வொரு நூலும் பலரால் பல
காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர்
ஒருசேரத் தொகுக்கப்பட்டது.
இவற்றில் பல பாடல்களில்
அவற்றை எழுதியவரது பெயர்
காணப்படவில்லை.

அகத்தையும் புறத்தையும்
பற்றிப் பாடல்களாக இந்நூல்களைப்
பகுக்கின்றனர். தொழில், அளவு,
பாட்டு, பொருள் ஆகியவற்றால்
தொகுக்கப்ப்பட்டமையால்
தொகை எனப் பெயர்
பெற்றது. இத்தொகையுள்
ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள்
பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும்,
30 பெண்பாற்புலவர்களும் உண்டு.
ஆசிரியர் பெயர் தெரியாப்
பாடல்கள் 102.
எட்டுத்தொகை நூல்களுள்
பரிபாடலும், கலித்தொகையும்
தவிர்த்து மற்றவை ஆசிரியப்பாவால்
அமைந்து சில சமயம் வஞ்சிப்பாவால்
வரப்பெற்று அமைந்துள்ளன. 3 அடிகள்
சிற்றெல்லையாகவும் 140 அடிகள்
பேரெல்லையாகவும் பெற்றுள்ளன.

இந்நூல்கள் கடைச் சங்க காலத்தில்
இயற்றப்பட்டன என்பர்.
தொகுக்கப்பட்ட காலம் கி.பி.3
அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும்
கருதுவர்.

எட்டுத்தொகை நூல்கள்
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு

எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய
வெண்பா பின்வருவது:
இவற்றுள்,
அகப்பொருள் பற்றியவை: நற்றிணை,
குறுந்தொகை, ஐங்குறுநூறு,
கலித்தொகை, அகநானூறு.

புறப்பொருள் பற்றியவை :
புறநானூறு, பதிற்றுப்பத்து.
அகமும் புறமும் கலந்து வருவது:பரிபாடல்.
அகப்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக்
கிடைத்துள்ளன. புறப்பொருட்
பாடல்களுள் சில அழிந்தும், சில சிதைந்தும்,
பாடவேறுபாடுகள் மிகுந்தும்
காணப்படுகின்றன.

தொகுப்பு
முதன்மைக் கட்டுரை:
எட்டுத்தொகை தொகுப்பு
பரிபாடலில் எட்டு பாடல் அகம் பற்றியன.
இவை கடவுள் பற்றிய பாடல்களாகவும்,
தனிப்பாடல்களாகவும்,
ஆசரியப்பாவாலியன்றவை.
புறநானுற்றில் வஞ்சிப் பாடல்கள்
சிலவுள்ளன. இடத்திற்கேற்ப தேவையான
துறைகளுள் பாடல்களைப் பாடியுள்ளனர்.

புறத்திணைகளுள் வாழ்க்கைக்கு என்றும்
இன்றியமையாத அறங்களையும்,
ஒழுக்கங்களையும் வலியுறுத்தும் பாடாண்
முதலிய துறைகளைப் பாடியுள்ளனர். கிடைத்த
பாடல்களில் குறிஞ்சி,முல்லை, மருதம்,
நெய்தல் என நான்கு திணைகட்கும்
நான்கு நூறு என ஒரு வகையாகத்
தொகை கொண்டனர்.

ஐங்குறுநூற்றுள் பாலைக்கும்
ஒரு நூறு கொண்டனர்.
பிற்காலத்தார் நான்கு திணைப்
பாடல்களை ஐந்திணைக்கும் பலவகையாகப்
பிரித்திருக்கக்கூடும். பாடலகளின்
அடியளவுகளைக் கொண்டு பல
தொகை நூல்களைத்
தொகுத்துள்ளனர்.
3அடிச் சிறுமையும் 6அடிப் பெருமையுமுடைய
பாடல்களை ஐங்குறுநூறு என்றனர்.
ஐந்து புலவர்கள் நூறுநூறாக பாடிய
தனித்தன்மையையும்
உடையது இத்தொகை நூல்.

சேரமான்
யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல்
இரும்பொறையென்ற சேரன்
ஆதரவால் கூடலூர்க்கிழார் இதனைத்
தொகுத்தார்.

4-8 அடியெல்லையினையுடைய பாடல்களைக்
குறுந்தொகை ஆக்கினர். 9-12
அடிப்பாடல்கள் நற்றிணையாக அமைந்தன.

13-31 அடிப்பாடல்கள்
நெடுந்தொகையாய்
அகநானூறு ஆயின.
அகத்திற்கு நானூறு என்பத்ற்கேற்ப
புறத்திற்கும் நானூறு பாடல்களைத்
தொகுத்தனர். புறநானூறும்,
பதிற்றுப்பத்தும் புறத்தை பற்றியன.
மற்றவை அகம் பற்றியன. சிறப்பாக
ஒரு பகுதியைப் பேசினாலும் திணை நூல்களின்
பாடல்களை அறம்,
பொருள் ,இன்பம் என்னும்
முப்பகுதிகளைப் பற்றிய
உண்மைகளை இடையிடையே தம்முள் விரவப்
பெற்றுள்ளன. புறப்பாடல்களில்
அரசரின் போர்கள்,
கொடை ஆகியவை பற்றியும்,
அகப்பாடல்களில் வாழ்க்கைக்குரிய
ஒழுக்கவுண்மைகளைப் பற்றியும் அரிய
குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
கடையெழு வள்ளல்களைப் பற்றிய
குறிப்புக்கள் புறநானூற்றிலும்
அகப்பாடல்களிலும் மிகுதியாகக்
காணப்படுகின்றன.தம்மைப் புரந்த
வள்ளல்களை நன்றியுடன் குறிப்பிடும்
குறிப்புகளே இவை. கடைச்சங்கத்
தொடக்கத்தில் இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதனும், கரிகாலனும்
இலங்கியுள்ளனர். அக்காலத்தே ஆண்ட
சேர, சோழ, பாண்டியர், சிற்றரசர்கள் குறுநில
மன்னர் ஆகியயோரைப் பற்றிய குறிப்புகள்
புறநானூற்றில் மிகுதியாகவும்
அகநூல்களில் ஓரிரு வரிகளாகக் கலந்தும்
காணப்படுகின்றன.
பொதுவாக
எட்டுத்தொகை நூல்களில் பண்டைத்
தமிழ் அரசர்களின் போர்த்திறங்களையும்,
வரையாது வழங்கும் வள்ளன்மைப் பண்பையும்,
மறக்குடி மளிரின் மாண்பினையும், போர்த்
தவிர்க்க இடைநின்ற சான்றோர்களின்
இயல்புகளையும், ஐந்திணைக்குரிய
அன்பொழுக்கங்களையும்,புராணச்
செய்திகளையும், வரலாற்றுக்
குறிப்புகளையும் அறியலாம்.

தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம்

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு மேலான
தொடர்ச்சி கொண்ட
உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று.
வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ்
இலக்கியங்கள் இயம்புகின்றன.
தமிழ்
இலக்கியத்தில் வெண்பா, குறள் ,
புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி ,
தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கி
யங்கள் என பல வடிவங்கள் உள்ளன.

தமிழில்
வாய்மொழி இலக்கியங்களும்
முக்கிய இடம் வகிக்கின்றன.
வரலாறு
மு. வரதராசனின் தமிழ் இலக்கியம்
என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ்
இலக்கிய கால
வகைப்பாட்டை அடிப்படையாகக்
கொண்ட
வகைப்பாடு பின்வருமாறு.

பழங்காலம்
சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி 300)
நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)
இடைக்காலம்
பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
காப்பிய இலக்கியம் (கிபி 900
கிபி 1200)
உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500)
புராண இலக்கியம் (கிபி 1500 -
கிபி 1800)

புராணங்கள், தலபுராணங்கள்
இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
இக்காலம்
பத்தொன்பதாம்
நூற்றாண்டு
கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
புதினம்
இருபதாம் நூற்றாண்டு
கட்டுரை , சிறுகதை , புதுக்கவிதை,
ஆராய்ச்சிக் கட்டுரை
இருபத்தோராம் நூற்றாண்டு
அறிவியல் தமிழ், கணினித் தமிழ்
முதற்சங்கம், இடைச்சங்கம்
தொல்பழங்காலத்தில்,
அக்காலப் பாண்டிய அரசர்களின்
ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று
தமிழ்ச்சங்கங்கள்
தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில்
தமிழிலக்கியங்கள் பல
இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என
அழைக்கப்படும் இம் முச்சங்கங்கள் சார்ந்த
இலக்கியங்களிலே கடைச்சங்க நூல்கள்
மட்டுமே தற்போது கிடைப்பதாகச்
சொல்கிறார்கள்.
முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள்,
அக்காலங்களில் ஏற்பட்ட
கடல்கோள்களின்போது , நாட்டின்
பெரும்பகுதியுடன்
சேர்ந்து அழிந்து போனதாக கருதப்படுகிறது.

எனினும், முதலிரு சங்கங்கள்
இருந்தது பற்றியோ அல்லது அக்காலத்தில்
இலக்கியங்கள் இருந்தது பற்றியோ போதிய
உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.

சங்க இலக்கியம்
முதன்மைக் கட்டுரை: சங்க இலக்கியம்
சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில்
கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில்
எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள்
ஆகும்.
சங்க இலக்கியம் 473 புலவர்களால்
எழுதப்பட்ட 2381 பாடல்களைக்
கொண்டுள்ளது.இப்புலவர்களுள்
பல தரப்பட்ட தொழில் புரிந்தோரும்,
மற்றும் பெண்களும் உண்டு. சங்க
இலக்கியங்கள் அக்காலகட்டத்தில்
வாழ்ந்த தமிழர்களின்
தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக்
காட்டுவதாய் உள்ளது.பண்டைத்தமிழரது
காதல் , போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம்
போன்ற நடப்புகளைச் சங்க
இலக்கியப்பாடல்கள்
எமக்கு அறியத்தருகின்றன்.
பக்தி இலக்கிய காலம்
மத்திய காலம்
தற்கால இலக்கியம்
18ஆம், 19ஆம் நூற்றாண்டுக்
காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அரசியல் ,
மதம், கல்வி போன்ற தளங்களில் பல
விதமான மாற்றங்கள்
இடம்பெற்றன. குன்றக்குடி ,
திருவாவடுதுறை , திருப்பனந்தாள் போன்ற சைவ
மடங்களின் ஆதரவாலும், சில புலவர்
பரம்பரையினரின் முயற்சியாலும் தமிழ்
இலக்கியச் செல்வங்கள், விழுமியங்கள்
அழிவுறுவது காலத்தால்
தடுக்கப்பட்டது.அன்னிய ஆட்சியாலும்,
அவர்களுக்கு முட்டுக்
கொடுப்பவர்களாலும், மேற்கத்திய
கலாச்சாரத்தின் பாதிப்பாலும்,
ஆங்கில மொழியின்
செல்வாக்காலும்
நசிவடைந்து கிடந்தன தமிழ் மொழி,
தமிழ் இலக்கியம்; பின்னர்
அச்சியந்திரங்களின் வருகையும், நிலையான
ஆங்கிலேயர் ஆட்சியும், அதன்பின் ஏற்பட்ட
சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும்,
கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி, நவீன
சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற
காரணிகளால் தமிழ்
மொழியும்,இலக்கியமும் இக்
காலகட்டத்தில் பெரிதும்
வளர்ச்சியுற்றன. இக்காலகட்டத்தில்
இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக்
குறிப்பிடத்தக்க விடயங்களாவன:
சங்க இலக்கியங்கள் மீளக்
கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேற்றியதும்.
உரைநடையில் எழுதுவது அறிமுகமானது.
(19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதி)
புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம்
பெற்றது. (20ஆம் நூற்றாண்டின்
முற்பகுதி)
மணிப்பிரவாள நடை ஒழிந்தது.(20ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதி)
அச்சியந்திரங்களின் வருகையால் ஏடுகளில்
மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள் உ. வே.
சாமிநாதையர், ஆறுமுக நாவலர், சி. வை.
தாமோதரம்பிள்ளை போன்றோரின் மீள்
கண்டுபிடிப்பாலும்,அயராத உழைப்பாலும்
அச்சாக வெளிவந்தது.