வெள்ளி, 21 மார்ச், 2014

தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம்

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு மேலான
தொடர்ச்சி கொண்ட
உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று.
வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ்
இலக்கியங்கள் இயம்புகின்றன.
தமிழ்
இலக்கியத்தில் வெண்பா, குறள் ,
புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி ,
தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கி
யங்கள் என பல வடிவங்கள் உள்ளன.

தமிழில்
வாய்மொழி இலக்கியங்களும்
முக்கிய இடம் வகிக்கின்றன.
வரலாறு
மு. வரதராசனின் தமிழ் இலக்கியம்
என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ்
இலக்கிய கால
வகைப்பாட்டை அடிப்படையாகக்
கொண்ட
வகைப்பாடு பின்வருமாறு.

பழங்காலம்
சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி 300)
நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)
இடைக்காலம்
பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
காப்பிய இலக்கியம் (கிபி 900
கிபி 1200)
உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500)
புராண இலக்கியம் (கிபி 1500 -
கிபி 1800)

புராணங்கள், தலபுராணங்கள்
இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
இக்காலம்
பத்தொன்பதாம்
நூற்றாண்டு
கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
புதினம்
இருபதாம் நூற்றாண்டு
கட்டுரை , சிறுகதை , புதுக்கவிதை,
ஆராய்ச்சிக் கட்டுரை
இருபத்தோராம் நூற்றாண்டு
அறிவியல் தமிழ், கணினித் தமிழ்
முதற்சங்கம், இடைச்சங்கம்
தொல்பழங்காலத்தில்,
அக்காலப் பாண்டிய அரசர்களின்
ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று
தமிழ்ச்சங்கங்கள்
தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில்
தமிழிலக்கியங்கள் பல
இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என
அழைக்கப்படும் இம் முச்சங்கங்கள் சார்ந்த
இலக்கியங்களிலே கடைச்சங்க நூல்கள்
மட்டுமே தற்போது கிடைப்பதாகச்
சொல்கிறார்கள்.
முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள்,
அக்காலங்களில் ஏற்பட்ட
கடல்கோள்களின்போது , நாட்டின்
பெரும்பகுதியுடன்
சேர்ந்து அழிந்து போனதாக கருதப்படுகிறது.

எனினும், முதலிரு சங்கங்கள்
இருந்தது பற்றியோ அல்லது அக்காலத்தில்
இலக்கியங்கள் இருந்தது பற்றியோ போதிய
உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.

சங்க இலக்கியம்
முதன்மைக் கட்டுரை: சங்க இலக்கியம்
சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில்
கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில்
எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள்
ஆகும்.
சங்க இலக்கியம் 473 புலவர்களால்
எழுதப்பட்ட 2381 பாடல்களைக்
கொண்டுள்ளது.இப்புலவர்களுள்
பல தரப்பட்ட தொழில் புரிந்தோரும்,
மற்றும் பெண்களும் உண்டு. சங்க
இலக்கியங்கள் அக்காலகட்டத்தில்
வாழ்ந்த தமிழர்களின்
தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக்
காட்டுவதாய் உள்ளது.பண்டைத்தமிழரது
காதல் , போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம்
போன்ற நடப்புகளைச் சங்க
இலக்கியப்பாடல்கள்
எமக்கு அறியத்தருகின்றன்.
பக்தி இலக்கிய காலம்
மத்திய காலம்
தற்கால இலக்கியம்
18ஆம், 19ஆம் நூற்றாண்டுக்
காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அரசியல் ,
மதம், கல்வி போன்ற தளங்களில் பல
விதமான மாற்றங்கள்
இடம்பெற்றன. குன்றக்குடி ,
திருவாவடுதுறை , திருப்பனந்தாள் போன்ற சைவ
மடங்களின் ஆதரவாலும், சில புலவர்
பரம்பரையினரின் முயற்சியாலும் தமிழ்
இலக்கியச் செல்வங்கள், விழுமியங்கள்
அழிவுறுவது காலத்தால்
தடுக்கப்பட்டது.அன்னிய ஆட்சியாலும்,
அவர்களுக்கு முட்டுக்
கொடுப்பவர்களாலும், மேற்கத்திய
கலாச்சாரத்தின் பாதிப்பாலும்,
ஆங்கில மொழியின்
செல்வாக்காலும்
நசிவடைந்து கிடந்தன தமிழ் மொழி,
தமிழ் இலக்கியம்; பின்னர்
அச்சியந்திரங்களின் வருகையும், நிலையான
ஆங்கிலேயர் ஆட்சியும், அதன்பின் ஏற்பட்ட
சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும்,
கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி, நவீன
சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற
காரணிகளால் தமிழ்
மொழியும்,இலக்கியமும் இக்
காலகட்டத்தில் பெரிதும்
வளர்ச்சியுற்றன. இக்காலகட்டத்தில்
இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக்
குறிப்பிடத்தக்க விடயங்களாவன:
சங்க இலக்கியங்கள் மீளக்
கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேற்றியதும்.
உரைநடையில் எழுதுவது அறிமுகமானது.
(19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதி)
புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம்
பெற்றது. (20ஆம் நூற்றாண்டின்
முற்பகுதி)
மணிப்பிரவாள நடை ஒழிந்தது.(20ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதி)
அச்சியந்திரங்களின் வருகையால் ஏடுகளில்
மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள் உ. வே.
சாமிநாதையர், ஆறுமுக நாவலர், சி. வை.
தாமோதரம்பிள்ளை போன்றோரின் மீள்
கண்டுபிடிப்பாலும்,அயராத உழைப்பாலும்
அச்சாக வெளிவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக